இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Thursday, July 15, 2010

031- உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்



படம் :   அபூர்வ சகோதரர்கள் (Aboorva Sagathorgal) 
பாடல் :   
உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் (Unnai Nenaichchen )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   இளையராஜா 
வருடம் : 1989
இயக்குநர் : சங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
நடிகர்கள் : Kamal Haasan, Nagesh, Srividhya, Gowthami, Roobini
 


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Unna_Nenachen.mp3

வீடியோ காட்சி



பாடல் வரிகள்



உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
என்ன நெனைச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
என்ன நெனைச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
அந்த வானம் அழுதாதான்
இந்த பூமியேய் சிரிக்கும்
வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்......
உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
என்ன நெனைச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே

சரணம் 1

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்
கொட்டும் மழைக் காலம் உப்பு விற்கப் போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்
தப்புக் கணக்கை போட்டுத் தவித்தேன்
தங்கமே ஞானத் தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞானத் தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்......
உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
என்ன நெனைச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே

சரணம் 2

கண்ணிரெண்டில் நான் தான் காதல் எனும் கோட்டை
கட்டி வைத்துப் பார்த்தேன் அத்தனையும் ஒட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை யாவும் நல்ல மரம் ஆகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம்
தங்கமே ஞானத் தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஒட்டம் எடுப்போம்
தங்கமே ஞானத் தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்
உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
என்ன நெனைச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
அந்த வானம் அழுதாதான்
இந்த பூமியேய் சிரிக்கும்
வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்......
உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
என்ன நெனைச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே



1 comments:

விஜய் மோகன் said...

யாரை நினச்சு இந்த பாட்டை பாலு அண்ணா படிச்சார் என்று அவர்தான் சொல்ல வேண்டும்...
என்ன ஒரு ஏக்கம் அவரது குரலில்...

கமல்ஹாசனின் முக பாவனையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது....

இசைநாயகனும் உலக நாயகனும் கலந்து கொண்ட ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் பொங்கலுக்கு( ? ) ஒலிபரப்பப்பட்டது.
அதை தொகுத்து வழங்கியவை சதிலீலாவதியில் நடித்த ரமேஷ் அரவிந்த் ....

அந்த நிகழ்சியில் பாலு அண்ணா பாட கமல் முக மாவனை கொடுக்க பாடலை யார் பாடையது என்ற கேள்வி ரசிகர்களுக்கு அவர்கள் வத்த செக்...

பாலு அண்ணா வின் குரல் நமக்குத் தெரியாதா என்ன ? இருந்தாலும் அது அருமையான நிகழ்ச்சி...

பதிவிற்கு மிக்க நன்றி மதுரை அருண் அவர்களே...



விஜய் மோகன்
சிங்கப்பூர்

Post a Comment

Visitors of This Blog