இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Thursday, July 15, 2010

037- தாலாட்டு...பிள்ளை உண்டு..



படம் :   அச்சானி ( Achaani ) 
பாடல் :   
தாலாட்டு.. பிள்ளை உண்டு தாலாட்டு ( Thalattu Pillai )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம், P.சுசீலா. 
இசை :   இளையராஜா 
வருடம் : 1978
இயக்குநர் : காரைக்குடி நாராயணன்


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Thalattu_Piilai.mp3


பாடல் வரிகள்





SPB : தாலாட்டு... பிள்ளை உண்டு தாலாட்டு
மணித்தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு
சிறு மாங்கனிக் கண்ணம் முத்தமிட்டு

Suseela:பாராட்டு... அன்னை என்னை பாராட்டு
உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரெடுத்தேன்
SPB : தாலாட்டு..

சரணம் 1

SPB : நான் படைத்த தேன் மழலை
நலமுடன் வளர்ந்து வர வேண்டும்
Suseela:வான் படைத்த முழு நிலவாய்
வாழ்வில் வெளிச்சம் தர வேண்டும்
SPB : மான் படைத்த மைவிழியே
இன்னொரு பிள்ளை பெறவேண்டும்
Suseela:ஒன்றோ ரெண்டோ பிள்ளை
என்றால் இன்பம் கொள்ளை
SPB : மெய் சிலிர்த்திட மகன் படிப்பது
மழலை என்ற மந்திரம்
Suseela:யாழிசையிலும் ஏழிசையிலும்
இல்லை இந்த மோகனம்
SPB : தாலாட்டு.. பிள்ளை உண்டு தாலாட்டு
Suseela:உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரெடுத்தேன்
SPB : தாலாட்டு..

சரணம் 2

SPB : வாழ்க்கையிலே வழக்குகளை
என் மகன் நாளை தீர்த்து வைப்பான்
Suseela:வருத்தமுறும் மானிடர்க்கு
மருத்துவம் செய்து மகிழ்ந்திருப்பான்
SPB : நாம் வளர்த்த கனவுகளை
நனவாய் நிஜமாய் ஆக்கி வைப்பான்
Suseela:கண்ணன் வண்ணம் கண்டு
SPB : துள்ளும் உள்ளம் ரெண்டு
Suseela:தென்பொதிகையில் நின்றுலவிடும்
தென்றல் போல வந்தவன்
SPB : செந்தமிழினில் சிந்திசைக்க
சந்தம் கொண்டு தந்தவன்
Suseela:பாராட்டு,... அன்னை என்னை பாராட்டு
உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரெடுத்தேன்


0 comments:

Post a Comment

Visitors of This Blog