இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Showing posts with label Vaazhkai 1984. Show all posts
Showing posts with label Vaazhkai 1984. Show all posts

Friday, September 17, 2010

088- காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

7 comments


படம் :   வாழ்க்கை ( Vaazhkai )
பாடல் :  
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா.... ( Kaalam Maaralaam )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் வாணி ஜெயராம்
இசை :   இசைஞானி இளையராஜா 
வருடம் : 1984
இயக்குநர் : C.V. ராஜேந்திரன்
நடிகர்கள் :
சிவாஜி கனேஷன் , அம்பிகா





வாழ்க்கை என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ”காலம் மாறலாம் நம் காதல் மாறுமா” என்ற பாடலை பாலுஜியும் , வாணி ஜெயராம் அம்மாவும் இணைந்து பாடியிருப்பார்கள்...

இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்ததால் இந்த பாடலை பற்றி எந்தவொரு விமர்சனமும் பன்ன தேவையில்லை... அருமையான பாடல்...

நம் இதயத்தை அந்த வான் மேகங்களுக்குள் அழைத்துச் சென்று மீண்டும் இந்த பூமியில் கொண்டு வந்து விடும் பாடல் இப்போது உங்கள் செவிகளுக்காக....



Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Kalam_Maralam.mp3





    Get this widget |     Track details  | eSnips Social DNA    

பாடல் வரிகள்





காலம் மாறலாம் நம் காதல் மாறுமா




காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

தடைகள் தோன்றும் போதும்
தலைவி நீ பார்வை போதும்

இனி வரும்காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

தடைகள் தோன்றும் போதும்
தலைவி நீ பார்வை போதும்

இனி காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

எந்தன் தோளில் நீ சாய்ந்தால்
இன்னும் என்ன மௌனமோ

புல்லின் மீது பூ வீழ்ந்தால்
ஓசையென்ன கேட்குமோ

மல்லிகைக்கொடி தோளைச்சுற்றுதே

தேவன் தொட்டதால் பூமி சுற்றுதே

உடலில் காந்தம் கொண்டு
தழுவும் தங்கம் ஒன்று

இதழ்களில் ஈரமானதின்று

இனி வரும்காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

தடைகள் தோன்றும் போதும்
தலைவி நீ பாதை போதும்

இனி காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

காலம் என்னும் தேனாற்றில்
நாமிரண்டு ஓடங்கள்

வாழ்ந்து காட்டும் நம் வாழ்க்கை
வையகத்தின் பாடங்கள்

உள்ளம் கைகளால் உன்னை மூடுவேன்

உன்னை காக்கவே மண்ணில் வாழுவேன்

வாழும் காலம் யாவும்
மடியில் சாய்ந்தால் போதும்

தோள்களில் தூங்கும் பாரிஜாதம்

இனி வரும்காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

தடைகள் தோன்றும் போதும்
தலைவன் பார்வை போதும்

இனி காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா




Tamil Blogs & Sites



Saturday, September 4, 2010

087- அன்பிருக்கும் உள்ளங்களே

2 comments
படம் :   வாழ்க்கை ( Vaazhkai )
பாடல் :  
அன்பிருக்கும் உள்ளங்களே.... ( Anbirukkum ullangale )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் , S.P.ஷைலஜா   
இசை :   இசைஞானி இளையராஜா
வருடம் : 1984
இயக்குநர் : C.V. ராஜேந்திரன்
நடிகர்கள் :
சிவாஜி கனேஷன் , அம்பிகா


 ”வாழ்க்கை”  என்னும் திரைப்படத்திற்காக நம் பாலுஜியும், S.P.ஷைலஜாவும் இணைந்து இப்பாடலை பாடியிருக்கிறார்கள்
இசைஞானியின் இசையில் 1984ம் வருடம் வெளியான இப்படத்தில் சிவாஜி கனேஷன் மற்றும் அம்பிகா நடித்திருக்கிறார்கள்.. C.V. ராஜேந்திரன் படத்தை  இயக்கியிள்ளார்...

பாடலை நம் பாலுஜி ஒரு கலக்கு கலக்கியிருப்பார்... S.P.ஷைலஜா பாடியதை கேட்கும் போது ஓட்டப்பந்தயத்தில் பாலுஜி முன்னே ஓட அவரை விரட்டிப் பிடிக்க இவர் வேக்கமாக ஓடுகிறாரோ என்று என்ன வைக்கும்.. அப்படியொரு வேகம் அவரது குரலில்...

இதோ இப்பொழுது இந்த பாடலை கேட்போம்
Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Anbirukkum_Ullangale.mp3


     Get this widget |     Track details  |         eSnips Social DNA   


பாடல் வரிகள்


அன்பிருக்கும் உள்ளங்களே

என்னருமைச் செல்வங்களே
இன்பச் சுமை எந்தன் தோழிலே
என்ன குறை எந்தன் வாழ்விலே
பாசத்தில் மாலை கட்டி போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்
பாசத்தில் மாலை கட்டி போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

அன்பிருக்கும் உள்ளங்களே .... செல்வங்களே

சரணம் 1

மாலையில் தென்றல் வரும் வாசலைக் கூட்டி விடும்..
மல்லிகை பூக்கள் விடும் வாசனைக் கோலம் இடும்...
மாலையில் தென்றல் வரும் வாசலைக் கூட்டி விடும்..
மல்லிகை பூக்கள் விடும் வாசனைக் கோலம் இடும்...

ஆகயம் ஏவல் செய்யும்
எங்கும் ஆனந்த சாரல் விழும்
பொன்நாள் என்பது.... இன்நாள் வந்தது......

என் வானத்திலும் பொன் மீன் வந்தது
என் கண்ணில் இன்ப ஈரம்
என் நெஞ்சில் அன்பு பாரம்
என்னிடங்கும் நாள் தோறும் சந்தோஷ சங்கீதமே.....

அன்பிருக்கும் உள்ளங்களே .... செல்வங்களே....ஏஏஏஏ....

சரணம் 2

கைகளும் தாழ்ந்ததில்லை... கால்களும் சோர்ந்ததில்லை...
யாசகம் கேட்பதில்லை... பூமியை பார்த்ததில்லை...
கைகளும் தாழ்ந்ததில்லை... கால்களும் சோர்ந்ததில்லை...
யாசகம் கேட்பதில்லை... பூமியை பார்த்ததில்லை...

வானத்தில் மானானவன்....
தலை யாருக்கும் சாயாதவன்...
என் ஆசைகளை..... என் தேவைகளை....
என் வேர்வைகளால் நான் தீர்க்கின்றவன்
என் நெஞ்சில் உண்டு தங்கம்
என் கண்ணில் உண்டு வைரம்.....
என் ராஜாங்கம் என் வீடு.. இங்குண்டு பூ வாசனை...
அன்பிருக்கும் உள்ளங்களே
என்னருமைச் செல்வங்களே
இன்பச் சுமை எந்தன் தோழிலே
என்ன குறை எந்தன் வாழ்விலே
பாசத்தில் மாலை கட்டி போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்
ஆஆ...பாசத்தில் மாலை கட்டி போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

அன்பிருக்கும் உள்ளங்களே .... செல்வங்களே....ஏஏஏஏ....






Tamil Blogs & Sites





Visitors of This Blog