Showing posts with label Oru Oodia Nathiyaagirathu 1983. Show all posts
Showing posts with label Oru Oodia Nathiyaagirathu 1983. Show all posts
Monday, August 9, 2010
078- தலையை குனியும் தாமரையே
படம் : ஒரு ஓடை நதியாகிறது ( Oru Oodia Nathiyaagirathu )
பாடல் : தலையை குனியும் தாமரையே...... ( Thalaiyai Kuniyum Thamairaye )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , ராஜேஷ்வரி அல்லது B.S.சசி ரேகா
இசை : இசைஞானி இளையராஜா
வருடம் : 1983
இயக்குநர் : ஸ்ரீதர்
நடிகர்கள் : ரகுவரன், சுமலதா
பாடல் : தலையை குனியும் தாமரையே...... ( Thalaiyai Kuniyum Thamairaye )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , ராஜேஷ்வரி அல்லது B.S.சசி ரேகா
இசை : இசைஞானி இளையராஜா
வருடம் : 1983
இயக்குநர் : ஸ்ரீதர்
நடிகர்கள் : ரகுவரன், சுமலதா
"ஒரு ஓடை நதியாகிறது" என்ற தலைப்பு இந்த தலைமுறைக்கு எட்டாத ஒரு தலைப்பு. இப்படிப்பட்ட ஒரு கருத்துள்ள தலைப்பை இந்த காலத்தில் உள்ள இயக்குநர்களிடம் நாம் எதிர்பார்ப்பது மடத்தனம் என்றே சொல்லலாம். ஆனால் ஒரு மாறுபட்ட தலைப்பை இந்த காலக் கட்டத்தில் திரு.பார்த்திபன் தருவது ஒரு ஆறுதல்.(குடைக்குள் மழை, கண்ணாடிப் பூக்கள் இதுபோன்ற தலைப்பை வைத்துதான் கூறுகிறேன்.)
புதிதாக திருமணமான ஒரு ஆணும், பெண்ணும், அவ்ர்களுக்கே உரித்தான வெட்கத்துடனும், பரபரப்புடனும், இனம்புரியாத பயத்துடனும், ஆர்வத்துடனும், காதலுடனும், காமத்துடனும், புதிய வாழ்க்கையொன்றைத் துவங்குவதற்காக, ஏகமான கற்பனைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும், சேர்ந்து ஒரு பாடலை ஸ்ரீதர் அவர்கள் நம் இளையராஜாவிடம் கேட்க அதை நம் பாலுஜியின் குரலில் கொடுத்த அற்புதத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.
முதலிரவன்று அறைக்குள் காத்திருக்கும் நாயகனை, நாணத்துடன் தலைகுனிந்து வரும் நாயகி சந்திப்பதும், தாம்பத்யம் தொடங்குவதையும், முடிவில் ஆசுவாசப்படுத்திக் கொள்வதையும் களமாக வைத்து இப்பாடலை இளையராஜா கொடுத்திருக்கிறார்.
பாலுவும், ராஜேஸ்வரியும் தங்களுக்குள் ஒரு அதீத உணர்வுகளைக் கொடுத்து இந்த பாடலை பாடியிருப்பார்கள். இளையராஜாவின் அந்த காலக்கட்ட்த்தில் பலமாக கருதப்பட்ட வயலினும், அதனைத் தொடர்ந்து புல்லாங்குழலும் சேர்ந்தொலிக்க, பாடல் முழுவதிலும் பாலுவும், ராஜேஸ்வரியும் உல்லாசமாக பாடி(பறந்தி)யிருப்பார்கள். இப்பாடலை நம் பாலுவுடன் இணைந்து பாடியது ராஜேஸ்வரியா அல்லது சசிரேகாவா என்பது ஒரு குழப்பமே... ஆனால் இணயத்தில் ராஜேஸ்வரி என்று பல இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நம் நாயகன் ரகுவரனின் புகைபடத்தை பார்த்து விட்டு நான் வேறு யாரோ என்றுதான் நிணைத்தேன். இணைய தளத்திலும் இந்த பாடலை இங்கு பதிய கேட்டு திரு.Anonymous அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலின் மூலமாகவும் தான் தெரிந்துகொண்டேன். இப்படத்தில் நடித்த கதாநாயகி சுமலதா தற்போதைய கன்னட நடிகர் திரு.அம்பரீஷின் மனைவியாக உள்ளார்.(அடுத்து யார் மனைவியாக இருப்பார் என்று நம் தமிழ்நாட்டு குறும்பை காட்டி சிரிக்கக் கூடாது.)
என்ன திரு.Anonymous அவர்களே தங்களது விருப்பப் பாடல்... (சரி..சரி.. நம் அணைவரின் விருப்பப் பாடல் தான்..) இங்கு பதியப்பட்டு விட்டது.. சந்தோஷம் தானே... பாடலை மற்றும் ஒருமுறை கேட்டு மகிழுங்கள்.. இப்படத்தை பற்றியும், பாடலை பற்றியும் இங்கு பதிய காரணமாயிருந்ததற்கு மிக்க நன்றி.
இனி பாடலை கேட்போமே....
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Thalaiyai_Kuniyum_Thamaraiye.mp3
Song Download Link : Thalaiyai_Kuniyum_Thamaraiye.mp3
பாடல் வரிகள்
தலையை குனியும் தாமரையே
தலையை குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையை குனியும் தாமரையே
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
ஆஅ.......
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பார்கடலின் ஓரம் பள்ளிவைக்கும் நேரம்
பார்கடலின் ஓரம் பள்ளிவைக்கும் நேரம்
அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து
தலையைக் குனியும் தாமரை நான்
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையை குனியும் தாமரையே
சரணம் 1
காத்திருந்தேன் அன்பே இனி
காமனின் வீதியில் தேர் வருமோ
பூமகள் கன்னங்கள் இனி
மாதுளை போல் நிறம் மாறிடுமோ
ஆயிரம் நானங்கள் இந்த
ஊமையின் வீனையில் இசை வருமா
நீயொரு பொன்வீனை அதில்
நுனிவிரல் தொடுகையில் பலசுரமா
பூவிரகந்தது முதல்முறையா
ம்ம்ம்ம்.......வேதனை வேளையில் சோதனையா
முதல் முறையா ?
இது சரியா ?
சரி சரி பூவாடைக் காத்து ஜன்னலை சாத்து
ஆஆஆஆ.....
பூவாடைக் காத்து ஜன்னலை சாத்து
உத்தரவு தேவி தத்தலிக்கும் ஆவி
உத்தரவு தேவி தத்தலிக்கும் ஆவி
இரண்டு நதிகள் இனைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்
தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே
Subscribe to:
Posts (Atom)


