இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Showing posts with label Janaki Raman 1997. Show all posts
Showing posts with label Janaki Raman 1997. Show all posts

Saturday, May 21, 2011

103- பொட்டுமேல பொட்டு வச்சு

4 comments



படம் :   ஜானகி ராமன் ( Janaki Raman )
பாடல் :  
பொட்டுமேல பொட்டு வச்சு ( Pottumela Pottu vachu )
பாடியவர் :   பத்ம பூஷன் S.P.பாலசுப்பிரமணியம், அனுராதா ஸ்ரீராம்
இசை :   சிற்பி  

பாடலாசிரியர்  : பழனி பாரதி
வருடம் : 31-10-1997
இயக்குநர் : சுந்தர். C
நடிகர்கள் :
சரத்குமார், நக்மா, ரம்பா, கவுண்டமனி, மணிவன்னன், செந்தில், ஆனந்தராஜ் மற்றும் பலர்

 தயாரிப்பு  :   Mrs.மலர் பாலு 
வசனம்  : K.செல்வ பாரதி

எடிட்டிங் :   சாய் சுரேஷ் 
கலை  : G.K.





ஒரு நல்ல குத்து பாடல் நம் பாலுஜியின் குரலில் கேட்கவேண்டும் என்று விரும்பும் அன்பர்களுக்காக இந்த பாடல் ..

நம் பாலுஜியின் குரலோடு அனுராதா ஸ்ரீராம் அவர்களின் குரலும் சேர்ந்து பாடலின் தரத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
இந்த பாடல் 1997ம் வருடம் சுப்ரீம் ஹீரோ சரத்குமார் மற்றும் நக்மா,ரம்பா(இவர்கள் இருவருக்கு மட்டும் ஏன் அடை மொழியை குறிப்பிடவில்லை
என்று கேட்கும் நேயர்களுக்கு ஒரு சபாஷ்..) நடிப்பில் இசையமைப்பாளர் திரு.சிற்பி அவர்களின் இசையில் ”ஜானகி ராமன்” என்ற படத்திற்காக பதியப்பட்டது...
அடிக்கடி இந்த படத்தை கே டீ-வியில் ஒளிபரப்புவார்கள்.. படமும்  அதில்வரும் அனுமார் காமெடியும் சூப்பர் டூப்பர் ஹிட்...


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Pottu_Mela_Pottu_Vachu.mp3


     
 
 

பாடல் வரிகள்

பொட்டு மேல பொட்டு வச்சு
பொட்டலில போற புள்ள .. ஏ...
பொட்டு மேல பொட்டு வச்சு
பொட்டலில போற புள்ள

நீ தொட்டு வச்ச குங்குமம்மா
நான் மண்ணில் வந்து பொறக்கலியே
நான் மண்ணில் வந்து பொறக்கலியே
பொட்டு மேல பொட்டு வச்சு
பொட்டலில போற புள்ள


சரணம் 1

A.Sriram :கட்டிபுடிச்சா புயல் அடிக்குதையா
       என் உச்சி முதல் பாதம் வரைக்கும்
       பட்டி மன்றம் தான் ஒன்னு நடக்குதையா
       என் கட்டிலுக்கும் தலை அணைக்கும்
SPB    : பொத்தி வச்சு பொத்தி வச்சு
      ஆச ரொம்ப முத்தி போச்சு
      உன்னை கண்ட பின்பு தானே
      மோட்சம் வந்துச்சு
A.Sriram :பெண்மைக்கு வெட்கம் தொல்லையா - அட
        ஆசைக்கிங்கு எப்போதும் எல்லை இல்லையா ?
SPB    : இது கட்டுக் காவல் விட்டுத் தாண்டும் வயசில்லையா ?

SPB    : பொட்டு மேல பொட்டு வச்சு
      பொட்டலில போற புள்ள..ஏஏஏ....


சரணம் 1

SPB    : காவி கட்டத்தான் மனம் நெனச்சதடி
       உன்னை பார்த்த பின்னே மாறி போச்சு
A.Sriram :ஆஅஹா...
SPB    : ஆடி அசஞ்சு நீ நடக்கயிலே
SPB     : தவம் அத்தனையும் ஆடி போச்சு
A.Sriram :கையில் பட்டு காலில் பட்டு
      பட்டுச் சேல கெட்டு போச்சு
      சிக்கிக்கிட்டு சின்ன பொண்ணு செவந்திருச்சு
SPB      : பொல்லாத ஆசை விடும்மா ?
       உன்னை விட்டு வைக்க நான் என்ன ஞானப்பழமா ?
A.Sriram :உன் பக்தி இப்போ முத்தி போச்சு ரொம்ப மோசமா

SPB    :பொட்டு மேல பொட்டு வச்சு
A.Sriram :ஆஆஆஆ
SPB    :பொட்டலில போற புள்ள .. ஏ...
A.Sriram :ஆஆஆஆ
SPB      :பொட்டு மேல பொட்டு வச்சு
SPB      :பொட்டலில போற புள்ள
      நீ தொட்டு வச்ச குங்குமம்மா
A.Sriram :ஆஆஆ
SPB    :நான் மண்ணில் வந்து பொறக்கலியே
ஆஆஆ
SPB      :நான் மண்ணில் வந்து பொறக்கலியே

தையாரே தையதையரா...தையாரே தையதையரா...தையாரே தையதையரா...






Visitors of This Blog