இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Wednesday, May 26, 2010

021 -ஓரு முறை எந்தன் நெஞ்சில் காதை

படம் :   ஆசை (Asai) 
பாடல் :   ஓரு முறை எந்தன் நெஞ்சில் (Oru Murai Enthan ...  )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,  சொர்ண லதா 
இசை :   தேவா 
வருடம் : 1995
இயக்குநர் : வசந்த்
நடிகர்கள் : Ajith Kumar, Prakash Raj, Suvalakshmi
பாடலாசிரியர் : வைரமுத்து

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Orumurai Endhan Nenjil.mp3



Get Your Own Hindi Songs Player at Music Plugin

SPB            : ஓஹொ..ஓஓஓஓஓ...
Swarnalatha: ஓஹொ..ஓஓஓஓஓ....
SPB :  ஓரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ...
Chorus :   திலோத்தமா
 SPB :   இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ...
Chorus : திலோத்தமா
SPB : ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
கலைபவன் நானம்மா
Swarnalatha: ஓஹொ..ஓஓஓஓஓ..
SPB           : ஓஹொ..ஓஓஓஓஓ..


சரணம் 1


SPB : இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே என்ன என்ன என்ன என்ன என்ன      என்ன?
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே
chorus: என்ன
Swarnalatha : இரவு இப்போது நீளம் ஆனதே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன?
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே 
chorus : என்ன
SPB    : எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன?
என் பேர் இப்போது மறந்து போனதே 
chorus: என்ன
Swarnalatha : வானம் இப்போது பக்கம் வந்ததே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன?
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே
chorus: என்ன
SPB : ஓஹோ...
ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே அது பிரிவதில்லை
Swarnalatha: ஓஹோ...
ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே சொல்லும் அறிவதில்லை
SPB : ஓரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ...
Chorus :      திலோத்தமா
SPB :           இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ...
Chorus :        திலோத்தமா


சரணம் 2


SPB : காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே இல்லை இல்லை இல்லை  இல்லை இல்லை இல்லை?
காதல் கொள்ளாத ஜீவன் பூமியில் 
Chorus : இல்லை
Swarnalatha: கண்கள் இல்லாமல் காட்சி என்பதே இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை?
கனவே இல்லாமல் நிலவு என்பதே 
Chorus : இல்லை
SPB : தண்ணீர் இல்லாமல் எந்த மீனும் இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை?
தலைவி இல்லாமல் காதல் காவியம் 
Chorus : இல்லை
Swarnalatha: மண்ணை தொடாத மழையும் வானிலே இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை?
உன்னைத் தொடாத உறவு என்பதும் 
Chorus : இல்லை
SPB : ஓஹொ..
இந்த இயற்கையெல்லம் நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன
Swarnalatha: ஓஹொ..
இது காதலுக்கே உள்ள ஜீவ குணம் இதில் கலக்கமென்ன
SPB : ஓரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ...
Chorus : திலோத்தமா
SPB : இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ...
Chorus : திலோத்தமா
SPB : ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
கலைபவன் நானம்மா
SPB & Swarnalatha: ஓஹோ.... ஓஹோ....

0 comments:

Post a Comment

Visitors of This Blog