இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Monday, June 4, 2012

109- இசை வேந்தனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்





இன்று 66வது பிறந்தநாள் காணும் எங்கள் “பாடும் நிலா” பத்ம பூஷன் S.P.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு
”மதுரையின் பாடும் நிலா” குழு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

பாலுவின் பிறந்த நாள் பரிசாக அவர் பாடிய ஒரு நல்ல பாடலை(ஒண்ணா..? ஆயிரம் பாட்டு இருக்குன்னு நீங்க திட்டுறது எனக்கு கேக்குது..)
பதியலாம் என்று தான் நினைத்தேன்,.. ஆனால் அதை விட அவரைப் பற்றிய சில தகவல்களை பறிமாறினால் அது இன்னும்
சுவாரஷ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன்,..


ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் (தற்போது ஆந்திரப் பிரதேசம்) அன்றைய தேதியில் பிறந்த ஒரு மாமனிதன்
இசைத்தாயின் அருளால் 66 வருடங்களை (அதாவது இன்று) கடந்து  இசை உலகில் ஒரு பாடும் நிலாவகா உலா வருவார் என்று அன்றைய தினம்
பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

1960களின் பிற்பகுதியில் தமிழ் திரையிசை உலகில் புயலெனப் புகுந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இன்று 40 ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து
முன்னணிப் பாடகராகத் திகழ்ந்துவருகிறார்.எம்.ஜி.ஆர்.ருக்காக எஸ்.பி.பி. பாடிய "ஆயிரம் நிலவே வா" பட்டிதொட்டிகளிலெல்லாம் புகழ்பெற்று ஒலித்தது


15 December 1966 அன்று தான் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் திரையுலக இசை சங்கமத்தில் பாட ஆரம்பித்த நாள். அவருடைய இசை குரு
திரு.S.P.கோதண்டபானி அவைகளின் இசையில் ”ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாத ரமனா” என்ற திரைப்படத்திற்காக ஒரு பாடலை பாடினார்.

ஒரு பாடல் இசை போட்டியில் (super singer competition) திரு.S.P.கோதண்டபானி முதல் பாடகராக S.P.பாலசுப்பிரமணியம் அவர்களை தேர்ந்தெடுத்தார்.

தமிழ் இசை உலகில் 1969-ல் சாந்தி நிலையம் திரைப்படத்திற்காக  ”இயற்கை என்னும் இளையக்கன்னி” என்ற பாடல் மூலம் தன்னுடைய குரல் தடத்தை பதித்த அவர் தமிழ் மொழி ரசிகர்கள் அணைவரையும் இன்று வரை தன் குரலால் வசியப்படுத்தி வைத்திருக்கிறார் என்றால் அது மிகாயாகாது...

ஒரே நாளில் 23 பாடல்களை பாடி சாதனை புரிந்தவர் நம் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள். அதில் 15க்கும் மேற்பட்ட பாடல் டூயட் பாடலாக P.சுசீலா அம்மாவுடன்
இணைந்து பாடியிருந்தார்.

கன்னட இசியமைப்பாளர் திரு.உப்பேந்திர குமார் அவர்களின் இசையில் 16 பாடல்களை 6 மணி நேரத்தில் பாடிக்கொடுத்திருக்கிறார் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள்.

திரு.ராம் லெஷ்மனன் இசியில் 6 பாடல்களை 4 மணி  நேரத்தில் மும்ம்பையில் நடந்த ரெக்கார்டிங்கில் பாடிக்கொடுத்திருக்கிறார் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள்.

ஒரே நாளில் மூன்று இடங்களில் நடந்த ரெக்கார்டிங்கில் 17 பாடல்களை திரு.ஆனந்த் மிலிந்த் அவர்களுக்காக பாடிக்கொடுத்திருக்கிறார் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள்.


சங்கராபரன்ம் படத்திற்காக S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் பெற்ற நேஷனல் அவார்ட் விருது இன்றும் அவருக்கு மறக்க முடியாத விருதுகளில் ஒன்று என்று பலமுறை கூறியுருக்கிறார்.

கல்லூரிகளில் நடக்கும் பாட்டுப் போட்டி இசை நிகழ்ச்சிகளிலெல்லாம் பலரும் அவரைப் போலவே பாட முயற்சிப்பது காணக்கூடியதாக இருக்கும்.இளமைத் துள்ளலின் பிரதிபலிப்பாகவும்
உற்சாகத்தின் உறைவிடமாகவும் விளங்கியது எஸ்.பி.பி.யின் குரல். நகைச்சுவை உணர்வை சிரிப்பாகவும் கிண்டலாகவும் பாடும்போதே வெளிப்படுத்தக்கூடியவர் அவர்.


நான்கு சகாப்தங்களாக தொடர்ந்துவரும் ஒரு பாடகர் எஸ்.பி.பி என்றால் அது மிகையில்லை


இன்னும் பல ஆண்டுகள் அவர் நலமுடன் வாழ வேண்டும் என்று “மதுரையின் பாடும் நிலா”  குழு சார்பாக மீண்டும் ஒரு முறை வாழ்த்திகிறேன்.

6 comments:

பிரதாப் said...

அருமையான பதிவு.. பாலுஜி பற்றிய தகவல்கள் அணைத்தும் சூப்பர்...

வாழ்த்துக்களுடன்
பிரதாப்

Sathya Bama said...

இன்று 67 ஆவது பிறந்த நாள் கொண்டாடும் பத்ம ஸ்ரீ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவ‌ர்க‌ளுக்கு TCTV த‌ன‌து வாழ்த்துக்க‌ளை தெரிவித்துக்கொள்கிற‌து.

எஸ்.பி.பி முதன் முதலாக பாடிய படம் எதுவென்றால் "பணம் படைத்தவன்" தெலுங்கு பதிப்பாகும். இந்த படத்தில் இடம் பெற்ற "பவளக்கொடியிலே முத்துக்கள் கோர்த்தால்" "மாணிக்கத்தொட்டில்" ஆகிய பாடலை தெலுங்கில் பாடினாராம். ஆனால் இந்த படம் வெளிவரவில்லை. இது பலரும் அறிந்திராத விஷயம்.

1966 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், வெளிவந்த "ஸ்ரீ ஸ்ரீ மரியாதராமண்ணா" என்ற தெலுங்குப் படம்தான், எஸ்.பி.பி பாடி முதலில் வெளிவந்த படம்

கார்த்திக் said...

பாடகர் எஸ்.பி.கோதண்டபாணி ஒரு பாடல் போட்டிக்கு நடுவராகச் சென்ற பொழுது 19 வயது பாலா பாடியதைக் கேட்டு உன் குரல் இது போல் இனிமையாக இருந்தால்
இன்னும் நீ 40 வருடங்களுக்கு பாடிக் கொண்டிருப்பாய் என பாலாவை வாழ்த்தியிருக்கிறார். கடவுளின் கிருபையில் கோதண்டபாணியின் வாழ்த்தும் பலித்து விட்டது :)

தகவலுக்கு நன்றி : TCTV


அன்புடன்,
கார்த்திக், சேலம்

Anonymous said...

//எஸ்.பி.பி முதன் முதலாக பாடிய படம் எதுவென்றால் "பணம் படைத்தவன்" தெலுங்கு பதிப்பாகும். இந்த படத்தில் இடம் பெற்ற "பவளக்கொடியிலே முத்துக்கள் கோர்த்தால்" "மாணிக்கத்தொட்டில்" ஆகிய பாடலை தெலுங்கில் பாடினாராம். ஆனால் இந்த படம் வெளிவரவில்லை. இது பலரும் அறிந்திராத விஷயம்.//

நல்ல தகவல் நன்றி சத்திய பாமா

Arun Kumar N said...

Sathya Bama Always give memorable moments about our Guruji ravee anna..

Thanks for comment here..

Anonymous said...

படம் பதிவிற்க்கு நன்றி அருண் >> கோவை ரவி, கோவை கோபாலகிருஷ்னன் :)..:)

Post a Comment

Visitors of This Blog