இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Saturday, December 17, 2011

108- தேவி நீயே... உந்தன் திருகோயில் மணிதீபம் நான்

படம் :   ஆசைகள்  ( Asaigal )
பாடல் :  
தேவி நீயே..உந்தன் திருகோயில் ( Devi Neeye Unthan )
பாடியவர் :    பத்மபூஷன் S.P.பாலசுப்பிரமணியம்
இசை :   சங்கர் கனேஷ் 
வருடம் : 1991
இயக்குநர் : சங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
நடிகர்கள் :
ரவீந்தர் , சத்யகலா



சோக பாடலையும் ஒரு வித உணர்ச்சியோடு பாடுவதை தனது தனி பானியாகவே கொண்டிருக்கும் நம் பாலுஜி இந்த பாடலிலும் அதை
சிறப்பாகவே செய்திருக்கிறார்.

திரு.சங்கர் கனேஷ் அவர்கள் இசையில் அழகாக அமைந்த இந்த பாடலுக்கு மொத்தம் மூன்று சரணங்கள். படத்தைப் பற்றி அதிகம் தெரியவில்லை என்றாலும் பாடலின்
மென்மை அருமை.

அருமையான ஒரு சோக பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள் நேயர்களே....

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Devi Neeye_Asaigal.mp3




Devi Neeye | Upload Music


பாடல் வரிகள்


SPB : 
தேவி நீயே...
உந்தன் திருகோயில் மணிதீபம் நான்
அன்று பூமாலை நான் சூட வந்தேனே

தேவி நீயே...
உந்தன் திருகோயில் மணிதீபம் நான்
அன்று பூமாலை நான் சூட வந்தேனே

தேவி நீயே...ஏஏஏஏ,,,,

சரணம் 1

இன்று உன் வாசல் நான் தேடி வந்தேன்
என்றும் உன் வாழ்க்கை பாதையில் நிழலாகுவேன்
உன்னைப்பார்த்தால் பொங்கும் இன்பம்
உன்னை நினைக்காத நெஞ்சத்தில் சுகமில்லையே
உந்தன் திருநாமமே என் திருமந்திரம்
உந்தன் திருநாமமே என் திருமந்திரம்
நித்தம் பூஜையும் வேதமும் உனக்காகவே

தேவி நீயே...
உந்தன் திருகோயில் மணிதீபம் நான்
அன்று பூமாலை நான் சூட வந்தேனே

தேவி நீயே...ஏஏஏஏஏஏஏஏ

சரணம் 2

ஜென்மம் பலகோடி நான் கொண்டபோதும்
உந்தன் பூஞ்சோலை பூவென மனம் வீசுவேன்
எந்தன் வாழ்வின் ராகம் நீயே
உந்த அபிஷேகச் சந்தனமும் நானாகுவேன்
தென்றல் காற்றாகியே உன்னை நான் தீண்டுவேன்
தென்றல் காற்றாகியே உன்னை நான் தீண்டுவேன்
உன் வானத்தில் வெண்மதி நானாகுவேன்

தேவி நீயே...
உந்தன் திருகோயில் மணிதீபம் நான்
அன்று பூமாலை நான் சூட வந்தேனே

தேவி நீயே...ஏஏஏஏஏஏஏஏ

சரணம் 3

என்னம் ஈடேற வழிகாட்ட வேண்டும்
மண்ணில் எந்நாளூம் மங்கலம் பெறவேண்டுமே
நெஞ்சில் ஆடும் ஆசைகள் கோடி அவை
நிறைவேறும் வேளையை எதிர்பார்க்கிறேன்
இன்று அதற்காகவே ஒரு வரம் கேட்கிறேன்
இன்று அதற்காகவே ஒரு வரம் கேட்கிறேன்
வண்ண மாமழை நீயென அருள் செய்வதேன்

தேவி நீயே...
உந்தன் திருகோயில் மணிதீபம் நான்
அன்று பூமாலை நான் சூட வந்தேனே

தேவி நீயே...ஏஏஏஏஏஏஏஏஏஏஏ.

2 comments:

Anonymous said...

வாணி ஜெயராம் பாடலும் உண்டு.

Anonymous said...

'ஆசைகள்'படம் ஐம்பதி லும் ஆசை வரும் 'என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 1981ல் வெளியானது...

Post a Comment

Visitors of This Blog