இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Wednesday, March 16, 2011

100- வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது



படம்        :   ஒரு தலை ராகம் (Oru Thalai Raagam)
பாடல்       
வாசமில்லா மலரிது..வசந்தத்தைத் தேடுது ( vaasamilla malaridhu...)
பாடியவர்     :   திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை        :   விஜய T. ராஜேந்தர் 
வருடம்   :  
12 Mar 1980

இயக்குநர்    :  E.M. இப்ராஹிம்
 தயாரிப்பாளர்       :   மன்சூர் கிரியேசன்ஷ்
வசனம்            :   விஜய. T.ராஜேந்தர்
ஒளிப்பதிவாளர்  :  
ராஜசேகர்

படத்தொகுப்பு    :  D.ராஜ்
கலை        :  V.கலை
நடிகர்கள்     சங்கர் , சந்திரசேகர், ரவீந்தர், ரூபா, உஷா ராஜேந்தர், விஜய T. ராஜேந்தர் மற்றும் பலர்
 
 

 


தளத்தின் நேயர்கள் ஆதரவோடு வெற்றிகரமாக 100வது பதிவை பதிவதில் மகிழ்ச்சியும் அதே தருணத்தில் தளத்திற்கு அடிக்கடி வந்தும், கருத்துக்கள் பதியும்
என் அன்பு நேயர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்...

இந்த பாடலை நம் பாலுஜி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த இரவு இன்னிசைக் கச்சேரியில் மதுரை நேயர்களுக்காக இந்த பாடலை பாடினார்...
பாடலின் முதல் வரியாய் ”வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது” என்று தான் ஆரம்பித்தார்.... அதனால் தான் இங்கு 100வது பதிவாக இந்த பாடலை பதியுமாறு என் மனமும் மதுரை நேயர்களும் கேட்டுக் கொண்டனர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப இந்த தளத்தின் அன்பு நேயர்களுக்காக இப்பொழுது..

நூறு பாடல்கள் பதிவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.. ஆனால் பாலுஜி நாப்பதாயிரம் பாடல்கள் பாடியுருக்கிறார் என்றால் அவரது
தொழில் ஈடுபாட்டை என்னவென்று பாராட்டுவது.. அதுவும் இந்த பாடல் வெளிவந்து 31 வருடங்கள் ஆகியும் காலத்தால் அழிக்கமுடியாமல் காற்றலைகளில்  இன்றும் மிதந்து கொண்டிருக்கிறது.....


"ஒரு தலை ராகம் (1980)" படம் மற்றும் இந்த பாடலைக் கேட்டாலே அணைவருக்கும் ஹீரோ சங்கரும் அவருடைய பெல்பாட்டம் பேண்ட்டும் தான் நினைவிற்க்கு வரும்.
1970 முதல் 1985 வரை இந்த பெல்பாட்டம் பேண்ட்டுதான் பலரது விருப்பம். பிறகு  டைட்ஸ் பின்பு பேகி என்று ஸ்டைல் மாறி இப்பொழுது மறுபடியும் அந்த பெல்பாட்டம் பேண்ட்டும் அதே மாடல் ஜீன்ஷும் அணியத் தொடங்கிவிட்டனர்.
படம் வெளிவந்து இரு வாரங்கள் கடந்துதான் ஹிட் ஆனது..
பாடல்களின் மூலம் தான் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுவும் T.M.செளந்தர்ராஜன் அய்யா, ஜேசுதாஸ் மற்றும் நம் பாலுஜியின் குரல்கள் கலந்ததால் அணைத்தும் மறக்கமுடியாதா
பாடல்கள்.இதில் நடித்த உஷா ராஜேந்தர் சிம்புவின் அம்மா என்று பலர் அறிந்த தகவல்தான். E.M. இப்ராஹிம் தான் இப்படத்தின் இயக்குநர் . இந்த படம்தான் அவருக்கு தமிழில் முதழும் கடைசி படமும்... விஜய. T.ராஜேந்தர் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருவார்... அவர் மேடையில் பாட வரும் காட்சியும் பேசிய வசனமும் அவருடைய தனி முத்திரை...

இந்த பாடலில்  முதல் வரியைப் பாடிவிட்டு, வரியின் முடிவில் பாலு ஒரு சிரிப்பை உதிர்ப்பார் . அது அவருக்கென்றே உள்ள ஒரு தனி முத்திரை...
இந்த மாதிரி சிரிப்பை பல பாடல்களில் இசையோடு பொருந்த பாடியிருப்பார்.  அந்த வரிகளை மட்டுமே பல தடவை கேட்கலாம்....


”பயணங்கள் முடிவதில்லை” என்ற படத்தில் வரும் "இளைய நிலா" என்ற பாடலும் இந்த பாடலைப் போன்றே படமாக்கியிருப்பார்கள்.இரண்டு பாடல்களிலுமே இருவரும் மைக்கைப் பிடித்துப்
பாடும் இந்தப் பாடல்கள் இனிமையான கிடார் இசையுடன் நம் பாலுஜியின் குரல்களில் மென்மையாக ஒலிக்கும்.

விஜய. T.ராஜேந்தர் இசையில் நான் விரும்பிக்கேட்கும் பல பாடல்களில் இந்த பாடலும் ஒன்று...
தளத்தின் வாசகர்களின் செவிகளுக்காக பாலுஜியின் மயக்கும் குரலில் இந்த பாடல் இப்பொழுது .... கேட்டு ரசியுங்கள்..
 பின்னூட்டம் அளிக்க மறந்து விடாதீர்கள் தோழர்களே....



Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Vasamilla_Malaridhu-SPB.mp3

Vasamilla Malaridhu - SPB | Upload Music


பாடல் வரிகள்




வாசமில்லா மலரிது   ஹஹஹஹஹ
வசந்தத்தைத் தேடுது
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

மாதங்களில் என்ன பன்னிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது


Lyrics in English

Vaasamillaa Malaridhu...(laughing)
Vasanthaththai Thaedudhu...
Vaasamillaa Malaridhu...Vasanthaththai Theduthu...
Vaigai Illaa Madhurai Idhu..Meenaakshiyai Thaedudhu..
Aedhaedho Raagam...Ennaalum Paadum
Azhaiyaadhaar Vaasal Thalai Vaiththu Odum...
Vaasamillaa Malaridhu...Vasanthaththai Thaedudhu...



Paattukkoru Raagam Aetri Varum Pulavaa
Unakkaen Aasai Nilavaval Maelae
Meetti Varum Veenai Sottavillai Thaenai
Unakkaen Aasai Kalaimagal Polae...(Meetti Varum)
Vaasamillaa Malaridhu...Vasanthaththai Thaedudhu...

Enna Sugam Kandaai Indru Varai Thodarndhu
Unakkaen Aasai Rathiyaval Maelae
Vanji Aval Unnai Ennavillai Indrum
Unakkaen Aasai Manmadhan Polae...(Vanji Aval)
Vaasamillaa Malaridhu...Vasanthaththai Thaedudhu...
Maadhangalai Enna Pannirandu Varalaam
Unakkaen Aasai Maelondru Kootta
Maadhu Thannai Ariya Kannirandum Poyyae
Unakkaen Aasai Uravendru Naada...(Maadhu )
(Vaasamillaa)

8 comments:

மதுரை செல்வா said...

அருமையான பாடல்.... அருமையான பின்னூட்டம்....
நூறாவது பதிவு இந்த தளத்திற்கு ஏற்றார்போல் பதிந்துள்ளீர்கள் அருண்....


இதை தங்களின் பிறந்தநாள் பதிவாக பதிந்தது மிக அருமை...

நன்பர்களே இன்று நம் மதுரை அருணுக்கு 25வது பிறந்த நாள்...

இந்த நூறாவது பதிவை போல் பலபதிவுகள் பதிந்து வழமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்..

அன்புடன்
மதுரை செல்வா

மதுரை பூபதி said...

சூப்பர் அருண்... கலக்கீட்டீங்க.... பாடலின் பின்னூட்டம் மிக அருமையாக தொகுத்துள்ளீர்கள்....
எனக்கு முன்னாடி செல்வா அண்ணா முதலில் முந்திக்கொண்டு பின்னூட்டம் பதிந்துவிட்டார்....

இன்று(17.03.1986) 25வது அகவையில் அடி எடுத்து வைக்கும் உங்களுக்கு நம் மதுரை நண்பர்கள் சார்பாக இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்....

இந்த நூறு பதிவுகள் இன்னும் ஆயிரம் பதிவுகளாக மலர இறைவனை பிரார்த்திக்கின்றேன்....

அன்புடன் ,
மதுரை பூபதி

Sathya Bama said...

அண்ணா பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்....

@ செல்வா அண்ணா

// நூறாவது பதிவு இந்த தளத்திற்கு ஏற்றார்போல் பதிந்துள்ளீர்கள் அருண்.... //

ஆம் செல்வா அண்ணா சொன்னதுபோல் பாடல் நம் தளத்திற்கு மிகுந்த பொருத்தம்....

முதன் முதலாக ஆங்கிலத்திலும் பாடல் வரிகளை பதிந்துள்ளீர்கள்... நேயர்களுக்கு நல்ல வசதியாக இருக்கும்...


@ பூபதி அண்ணா

// இன்று(17.03.1986) 25வது அகவையில் //

பூபதி அண்ணா இன்று என்று சொல்லிவிட்டு அருண் அண்ணா பிறந்த வருடத்தை பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்..
அருமையான தகவல்.....


பாலு சாரின் பாடல்களில் நான் அஹ்டகம் முனுமுனுக்கும் பாடல்....

பாடல் பகிர்விற்கு மிக்க நன்றி....

அன்புடன்,
சத்யா

Arun Kumar N said...

வாங்க செல்வா அண்ணா... பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி...

பூபதி பாடல் பதிவிற்கு தாங்கள் கொடுத்த ஒத்துழைப்பை நான் மறக்க மாட்டேன்..
நேயர்களே நூறாவது பாடல் பூபதியின் விருப்பம் தான்.....

சத்யா, பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி....


அன்புடன்,
மதுரை அருண்

கோகிலா said...

நூறாவது பதிவு மிக அருமை....
பாடல் தறவிறக்க வசதி அளித்ததற்கு மிக்க நன்றி...
பாலுவின் பாடல்களை தொகுத்து வழங்கும் உங்கள் பணி சிறப்படைய
என் வாழ்த்துக்கள்


அன்புடன்,
கோகிலா

ஷோபனா said...

அருமையான தளம்... பாலுவின் பாடல்களை கேட்பதற்கும் தறவிறக்கம் செய்வதற்கும் மிக எளிமையாக உள்ளது...
பாடலின் பின்னூட்டம் மிக அருமை...

ஷோபனா

விஜய் மோகன் said...

அருமையான பாடல் .... அடுத்த பாடலுக்காக காத்திருக்கிறோம் அருண்....
நல்ல ஒரு குத்து பாடலாக பதியுங்களேன்.......

அன்புடன்,
விஜய் மோகன்
சிங்கப்பூர்

Arun Kumar N said...

@கோகிலா
வருகைக்கு மிக்க நன்றி.. தறவிறக்கம் வசதி அணைத்து பாடல்களுக்கும் கண்டிப்பாக தரப்படும்...
அடிக்கடி வரவும்....

@ஷோபனா
வருகைக்கு மிக்க நன்றி... பின்னூட்டம் அளித்ததற்க்கும் நன்றி....

@விஜய் மோகன் சார்...
ஒவ்வொரு பதிவிற்கும் வந்து பின்னூட்டம் அளிப்பது மிக்க மகிழ்ச்சி....
அடுத்த பாடல் உங்கள் விருப்பமாகவே இருக்கும்....

அவ்புடன்
மதுரை அருண்

Post a Comment

Visitors of This Blog